ஜூன் 1 ஆம் தேதியிலிருந்து கூடுத லாக வரி செலுத்தும் நிலை உருவாகி யுள்ளது. ரூ.10 லட்சத்துக்கு மேற் பட்ட விலையுள்ள கார்கள் வாங்கு கிறபோது கூடுதலாக 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குறிப்பிட்டிருந்தார். இந்த கூடுதல் வரி விதிப்பு முறை நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இந்த கூடுதல் வரி, விற்பனையக விலை யின் அடிப்படையில் கார் விற்பனை யாளர்களிடமிருந்து வசூலிக்கப் படும். கார் வாங்குபவர்களின் வரு மான வரி கணக்கில் இந்த கூடுதல் வரி சரி செய்யப்படும்.
இந்த வரி தவிர ஜூன் 1-ம் தேதிக்குப் பிறகு சில கூடுதல் வரியும் அமலுக்கு வர உள்ளன. ஹோட்டல் உணவுகள், தொலைபேசி கட்ட ணங்கள், பயணக் கட்டணங்கள், இன்ஷூரன்ஸ், சொத்துக்கள் வாங்கு கிறபோதும் கிருஷி கல்யாண்’ சேவை வரி 0.50 சதவீதம் கூடுத லாக செலுத்த வேண்டும். இதன் மூலம் தற்போதுள்ள சேவை வரி 14.5 சதவீதத்துடன் சேர்த்து 15 சதவீதமாக சேவை வரியைச் செலுத்த வேண்டும்.