சென்னை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை பவுன் 40 ஆயிரத்தை கடந்தது. அதன் பிறகு தங்கம் விலை குறைந்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4885- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ. 39080-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 42272-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.74.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.74,700 ஆக உள்ளது.