அதிக ஏற்ற இறக்கத்தில் இருந்த பங்குச்சந்தை வர்த்தகம், முடியும் போது ஏற்றத்தில் முடிவடைந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 187 புள்ளிகள் அளவுக்கு சரிந்தது.
ஆனால் முடியும்போது 102 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 23 புள்ளிகள் உயர்ந்து 7650 புள்ளியில் முடிவடைந்தது.
ஸ்மால்கேப் குறியீடு 0.36 சதவீதமும் மிட்கேப் குறியீடு 0.52 சதவீதமும் உயர்ந்து முடிவடைந்தது.
முக்கிய குறியீடுகளில் ஹெல்த்கேர் குறியீடு 1.39 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்து எஃப்.எம்.சி.ஜி. ஆட்டோ, ரியால்டி, பவர் துறை பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.
சென்செக்ஸ் பங்குகளில் அதிகபட்சமாக ஹிண்டால்கோ 3.78 சதவீதம் உயர்ந்தது. இதற்கு அடுத்து ஹெச்.டி.எஃப்.சி., ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, சன் பார்மா ஆகிய பங்குகள் 2 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன. மாறாக சென்செக்ஸ் பங்குகளில் ஏர்டெல் 3 சதவீதத்துக்கு மேல் சரிந்தது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 2 பைசா உயர்ந்து ஒரு டாலர் 59.25 ரூபாயாக இருந்தது. ஆசியாவின் முக்கியமான பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.