வணிகம்

பெட்ரோல், டீசல் விலைகளில் சிறு குறைப்பு

செய்திப்பிரிவு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் பெட்ரோலிய உற்பத்தி நாடுகள் கூட்டமைப்பான ஓபக் ரஷ்யாவுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக கச்சா எண்ணெய் விலைகளை குறைத்து வருகிறது

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல், சவுதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை கணிசமாக குறைத்தது போன்ற காரணங்களால் கச்சா எண்ணெய் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

அந்த வகையில், இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 31காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.73.02 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 27 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.66.48ஆகவும் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT