இந்தியாவின் உருக்கு இறக் குமதி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் உள்ளூர் உற்பத்தி யாளர்கள், வெளிநாட்டி லிருந்து இறக்குமதியாகும் குறைந்த விலை யிலான உருக்கு காரணமாக கடும் நெருக் கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஜப்பான், கொரியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா வில் உருக்கு நுகர்வு முதல் காலாண்டில் 7.1 சதவீதம் அதிகரித்து 2 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் (2014-15) இறக்குமதி 71 சதவீதம் அதிகரித்ததில் மொத்தம் 9 கோடி டன் உருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் உருக்கு இறக்குமதியைக் கட்டுப் படுத்துவதற்காக சில உருக்கு பொருள்கள் மீதான அடிப்படை சுங்க வரியை 2.5 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியது.
இதனால் 7.5 சதவீதமாக இருந்த சுங்க வரி 10 சதவீதமாக உயர்ந்தது. அதே போல சில உருக்கு பொருள்களுக்கு 5 சதவீதமாக இருந்த சுங்க வரி 7.5 சதவீதமாக உயர்ந்தது.
கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு பொருள் குவிப்பு வரியை சில உருக்கு பொருள்கள் மீது விதித்தது. சீனாவிலிருந்து இறக்கு மதியான உருக்குக்கு ஒரு டன்னுக்கு 316 டாலர் வரி விதித்தது.
முழுவதும் உருக்கால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி முதல் காலாண்டில் 31 சதவீதம் சரிந்தது. 99 லட்சம் டன் உருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.