இந்தியப் பொருளாதாரத்துக்கு பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்கள் நீடிப்பதாக, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 60 பில்லியன் டாலர்களாக குறையும். ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் அரசின் நடவடிக்கைகள் காரணமாக குறையும் இறக்குமதி போன்ற காரணங்களால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும்.
அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு கடந்த சில வாரங்களாக நல்ல மாற்றங்கள் தெரிகிறது. இருந்தாலும் இந்திய பொருளாதாரத்துக்கு பணவீக்கம், முதலீட்டாளர்களின் எதிர்மறை எண்ணங்கள் உள்ளிட்ட சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது.
தற்போதைய நிலையில் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 88 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. இது ஜி.டி.பியில் 4.8 சதவிகிதம் ஆகும்.