பொதுத்துறை நிறுவனமான ரூரல் எலெக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர். 2011-ம் ஆண்டு நவம்பர் 29லிருந்து இந்தப் பொறுப்பில் இருந்து வருகிறார்.
மின் உற்பத்தித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். மத்திய மின் ஆணையத்திலும் பணியாற்றியுள்ளார்.
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் திட்ட இயக்கு நராகவும், ஆர்இசி டிரான்ஸ்மிஷன் புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.
சத்தீஸ்கர் சர்ஜுஜா பவர் நிறுவனம், கோஸ்டல் தமிழ்நாடு பவர் நிறுவனங்களில் தலைவர் மற்றும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
உத்தராஞ்சலில் உள்ள கோவிந்த வல்லப பந்த் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பட்டம் பெற்றவர். டெல்லி பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும், ரூர்கி ஐஐடி கல்வி நிறுவனத்தில் எம்டெக் பட்டமும் பெற்றுள்ளார்