வணிகம்

உலகின் மிகப் பெரிய சோலார் மின்னுற்பத்தி ஆலை: தமிழகத்தில் கமுதியில் அமைத்தது அதானி குழுமம்

பிடிஐ

உலகின் மிகப் பெரிய சோலார் மின்னுற்பத்தி ஆலையை அதானி நிறுவனம் தமிழ்நாட்டில் அமைத் துள்ளது. அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் 648 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யும் வகையில் இந்தியாவில் மிகப் பெரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.4,550 கோடி முதலீடு செய்துள்ளது.

இந்த சூரிய மின்னுற்பத்தி நிலையம் ஒரே இடத்தில் 648 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விதமாக இருக்கும். இதை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக நிறுவனம் வெளியிட்ட செய்தியில் தெரிவித் துள்ளது. இந்த ஆலையை தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைத்துள்ளது.

இந்த திட்டம் மாநில அரசின் மின்னுற்பத்தி இலட்சியத்துக்கு உதவும் விதமாக இருக்கும். சோலார் திட்டங்களின் மூலம் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என 2012-ம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 648 மெகாவாட் மின்சாரமும் கமுதியில் உள்ள துணை மின் நிலையத்தின் மூலம் தமிழ்நாடு மின் விநியோகக் கழகத்தில் சேர்க்கப்படும்.

தமிழ்நாடு மொத்த இந்தியாவுக்கும் இந்த நேரத்தில் முன் மாதிரியாக திகழ்கிறது என்று அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி குறிப்பிட் டுள்ளார். உலக அளவில் இந்தியா சோலார் மின் உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்க வேண்டும் என்பதே என் இலக்கு என்றும் அதானி கூறினார்.

SCROLL FOR NEXT