வணிகம்

பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க 7 அம்ச திட்டம்: மத்திய அரசு அறிவிப்பு

செய்திப்பிரிவு

பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க ஏழு அம்ச திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று அறிவித்தார். வங்கி தலைவர்களை நியமிப்பது, வங்கி வாரிய தலைமையிடம் (Bank Board Bureau), நிதி, கடன் நெருக்கடியைக் குறைப்பது, அதிகாரம், செயல்பாடுகளைக் கணக்கிடுதல் மற்றும் சீர்திருத்தம் உள்ளிட்ட ஏழு அம்சத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மிஷன் இந்திர தனுஷ் (Indradhanush) என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு இன்றி அமையாதது. கடந்த சில வருடங்களாகவே பொதுத்துறை வங்கிகள் பிரச்சினையில் இருக்கின்றன. ஒவ்வொரு காலத்திலும் தேவையான உதவியை மத்திய அரசு செய்துவருகிறது. பதற்றம் கொள்ளும் அளவுக்கு பொதுத்துறை வங்கிகளின் நிலைமை இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

13 பொதுத்துறை வங்கி களுக்கு நடப்பு நிதி ஆண்டில் 20,058 கோடி ரூபாய் மூலதன முதலீடு செய்யப்படும். எஸ்பிஐ வங்கி அதிகபட்சமாக ரூ.5,511 கோடி, பேங்க் ஆப் இந்தியா ரூ.2,455கோடி, ஐடிபிஐ வங்கி ரூ.2,229 கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.1,732 கோடி மற்றும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் ரூ.2,009 கோடி முதலீடு செய்யப்படும்.

தவிர வங்கி வாரிய தலைமை அமைக்கப்படும். ரிசர்வ் வங்கி கவர்னர் தலைமையில் இவை செயல்படும். வங்கித் தலைவர் களை நியமிப்பது, பொதுத்துறை வங்கிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணியை இந்த அமைப்பு செய்யும் என்றார். 2016-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த அமைப்பு செயல்படத் தொடங்கும்.

1969-ம் ஆண்டு வங்கிகள் பொதுவுடமை ஆக்கப்பட்டதற்கு பிறகு செய்யப்படும் மிகப்பெரிய சீர்திருத்தம் இது என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

ஐந்து பொதுத்துறை வங்கி களுக்கான தலைவர்களும் நேற்று அறிவிக்கப்பட்டனர். நிதிச் சேவைகள் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா இதனை அறி வித்தார். பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடாவின் தலை வராக மைக்ரோசாப்ட் இந்தியா வின் முன்னாள் தலைவர் ரவி வெங்கடேசன் நியமிக்கப் பட்டிருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் ஆறு பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

ஐந்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை தவிர இரண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு தலைமைச் செயல் அதிகாரிகளையும் மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது. முதல் முறையாக தனியார் வங்கிகளில் பணிபுரிந்தவர்கள் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT