வணிகம்

புதிய தொழிலில் சச்சின் பன்சால்

செய்திப்பிரிவு

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான சச்சின் பன்சால் புதிய நிறுவனத்தை தொடங்கி யுள்ளார். பிஏசி அக்யுசிஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரிலான இந்த நிறுவனம் பெங்களூருவில் கொரமங்களா எனுமிடத்தில் அமைந்துள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தில் தனக்குள்ள 5 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு விற்றுவிட்டு அதிலிருந்து விலகிய சச்சின் இப்போது புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங் களில் முதலீடு செய்யும். 2007-ம் ஆண்டு பிளிப்கார்ட் தொடங்கப் பட்ட அலுவலகத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் இப்புதிய அலுவலகம் அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT