வணிகம்

ரூ.3-ல் இருந்து ரூ.2.25 லட்சமான எல்சிட் நிறுவன பங்கு

செய்திப்பிரிவு

மும்பை: பங்குச் சந்தையில் மீண்டும் பட்டியலான எல்சிட் நிறுவனம் உச்சத்தை தொட்டுள்ளது. எல்சிட் (Elcid) இன்வெஸ்ட் மென்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஜூலை மாதத்தில் ரூ.3.21 ஆக இருந்தது. அந்நிறு வனத்தின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படாமல் இருந்தன.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி அந்நிறுவனம் மீண்டும் பங்குச் சந்தையில் பட்டியலானது. அப்போது அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.2.25 லட்சமாக உயர்ந்தது. அன்றைய தின வர்த்தக முடிவில் பங்கு மதிப்பு மேலும் 5 சதவீதம் உயர்ந்து ரூ.2.36 லட்சமாக உயர்ந்தது.

எல்சிட் நிறுவனம் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.8,500 கோடி மதிப்பிலான 2.95 சதவீதப் பங்குகளைக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ.3.2 லிருந்து ரூ.2.25 லட்சமாக உயர்ந்ததாகக் கூறப்படுகிறது. நேற்றைய வர்த்தக முடிவில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 5 சதவீதம் அதிகரித்தது ரூ.2.60 லட்சமாக உச்சம் தொட்டது. இதனால் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.5,209 கோடியாக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT