வணிகம்

தங்கம் ரூ.55,000-ஐ தாண்டி புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 அதிகரித்து ரூ.55,120-க்கு விற்பனையாகிறது. இதன்மூலம், தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி மிக அதிகபட்சமாக ஒரு பவுன் தங்கம் ரூ.43,040 ஆக அதிகரித்தது.

பின்னர், மீண்டும் கடந்த ஆண்டு படிப்படியாக உயர்ந்து டிசம்பர் மாதம் ரூ.47 ஆயிரத்தை எட்டியது. அதன் பின்னர் தங்கம்விலை குறைந்து ரூ.46 ஆயிரத்துக்குள் விற்பனை ஆனது.

பின்னர், மீண்டும் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, கடந்த 10 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இம்மாதம் 3-ம் தேதி ஒரு பவுன் ரூ.52 ஆயிரமாகவும், 9-ம் தேதி ரூ.53 ஆயிரமாகவும் அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்தது.

இந்நிலையில், தங்கம் விலைமீண்டும் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, தங்கம் நேற்று கிராம்ஒன்றுக்குரூ.55 அதிகரித்து ரூ. 6,890-்கும் பவுனுக்கு ரூ.440அதிகரித்து ரூ.55,120-க்கும்விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை பவுன் ரூ.58,880-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை: ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.90-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.90,000 ஆக உள்ளது.

SCROLL FOR NEXT