மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 334 புள்ளிகள் சரிவடைந்து 65,494 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 106 புள்ளிகள் சரிந்து 19,532 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 342.03 புள்ளிகள் சரிவடைந்து 65,486.38 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 152.20 புள்ளிகள் சரிந்து 19,486.10 ஆக இருந்தது.
அமெரிக்காவின் வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்த கவலைகளால் உலகளாவிய சந்தைகளின் பலவீனம், ஆசிய பங்குச்சந்தைகளின் சரிவு போன்ற சூழல்களால் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடன் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்டஸ், ஏசியன் பெயின்ட்ஸ், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வில் இருந்தன.
மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், பாரதி ஏர்டெல், விப்ரோ, நெஸ்ட்லே இந்தியா, என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.