வணிகம்

புதிய உச்சத்துடன் பங்குச்சந்தை நிறைவு: சென்செக்ஸ் 319 புள்ளிகள் உயர்வு

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை புதிய உச்சத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 319 புள்ளிகள் (0.47 சதவீதம்) உயர்வடைந்து 67,838 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 89 புள்ளிகள் (0.44 சதவீதம்) உயர்ந்து 20,192 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை புதிய ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 151.52 புள்ளிகள் உயர்வடைந்து 67,670.52 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54.00 புள்ளிகள் உயர்ந்து 20,157.10 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், புதிய வெளிநாட்டு மூலதன வரவு, தொலைத் தொடர்பு, வாகனம், தொழில்நுட்ப பங்குகளின் எழுர்ச்சி ஆகிய காரணங்களால் மூன்றாவது நாளாக தனது சாதனையை முறியடித்த இந்திய பங்குச்சந்தைகள், தொடர்ந்து 11-வது நாளாக ஏற்றத்துடன் நிறைவடைந்தது. இன்றைய இன்ட்ரா வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 67,927 ஆகவும், நிஃப்டி 20,222 ஆகவும் உயர்ந்திருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 319.63 புள்ளிகள் உயர்வடைந்து 67,838.63 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 89.20 புள்ளிகள் உயர்ந்து 20,192.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, மாருதி சுசூகி, இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்வடைந்திருந்தன.

ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், இன்டஸ்இன்ட் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், கோடாக் மகேந்திரா பேங்க், டைட்டன் கம்பெனி, ஐடிசி, எல் அண்ட் டி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

SCROLL FOR NEXT