மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 100 புள்ளிகள் (0.15 சதவீதம்) உயர்வடைந்து 65,880 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 36 புள்ளிகள் (0.18 சதவீதம்) உயர்ந்து 19,611 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. பின்னர் சரிவடையத் தொடங்கியது. காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 18.94 புள்ளிகள் சரிவடைந்து 65,761.32 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 0.75 புள்ளிகள் உயர்ந்து 19,574.15 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் கலப்பு சூழல்களுக்கு மத்தியில் சற்றே ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் பின்னர் சரிவை நோக்கிச் சென்றது. என்றாலும், வர்த்தகத்தின் கடைசி நேரத்தில் நுகர்வோர்பொருள்கள் பங்குகள் ஏற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தில் நிறைவடைந்தன.
இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 100.26 புள்ளிகள் உயர்வடைந்து 65,880.52 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 36.10 புள்ளிகள் உயர்ந்து 19,611.05 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஐடிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோடாக் மகேந்திரா பேங்க், எம் அண்ட் எம், நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டிசிஎஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.
ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, டெக் மகேந்திரா, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ,டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, இன்போசிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.