மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 141 புள்ளிகள் சரிவடைந்து 63,097 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி50 புள்ளிகள் சரிந்து 18,721 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கின. காலை 10:14 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 169.51 புள்ளிகள் சரிவடைந்து 63,069.38 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 70.90 புள்ளிகள் சரிந்து 18,700.35 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதிநாள் வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பாரதி ஏர்டெல், என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் பேங்க், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் உயர்வில் இருந்தன.
டெக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டைட்டன் கம்பெனி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி, டிசிஎஸ், விப்ரோ, அல்ட்ராடெக் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம், கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.