வணிகம்

சென்செக்ஸ் 284 புள்ளிகள் வீழ்ச்சி

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 284 புள்ளிகள் (0.45 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 63,238 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 850 புள்ளிகள் (0.45 சதவீதம்) வீழ்ந்து 18,771 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய சரிவுடன் தொடங்கி நிலையில்லாமல் சென்றது. காலை 10:03 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 50.16 புள்ளிகள் சரிவடைந்து 63,472.99 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.65 புள்ளிகள் சரிந்து 18,847.20 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் தொடங்கின. என்றாலும் வர்த்தம் முழுவதும் நிலையில்லாமல் பயணித்தது. உலகளாவிய சந்தைகளில் நிலவிய எதிர்மறை சூழல், நிதி, எண்ணெய், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் விற்பனை அழுத்தம போன்ற காரணங்களால் வீழ்ச்சியுடன் நிறைவடைந்து.

ஏற்ற இறக்கமான வர்த்தக நேரத்தின்போது 63,601 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ், 63,200 ஆக வீழ்ச்சியடைவும் செய்து. நிஃப்டி 18,886 வரை உயர்ந்து அதன் சாதனை உச்சத்தை 1 புள்ளியில் இன்றும் தவறவிட்டது. இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 284.26 புள்ளிகள் சரிவடைந்து 63,238.89 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 85.50 புள்ளிகள் சரிந்து 18,771.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்ரேஷன், என்டிபிசி, நெல்ட்லே இந்தியா, இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், அட்ல்ரா டெக் சிமெண்ட், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், டிசிஎஸ், மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, டெக் மகேந்திரா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

SCROLL FOR NEXT