வணிகம்

ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை 

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது. சென்செக்ஸ் 5 புள்ளிகள் (0.01சதவீதம்) உயர்வடைந்து 62,792 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்ந்து 18,599 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயேத் தொடங்கின. காலை 10:42 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 90.90 புள்ளிகள் சரிவடைந்து 62,696.57 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.50 புள்ளிகள் சரிந்து 18,575.35 ஆக இருந்தது.

உலகளாவிய பங்குச்சந்தைகளின் எதிர்மறை சூழல்கள், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் அழுத்தம் காரணமாக இன்றைய வர்த்தக நாள் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகளில் எதிர்மறை போக்கே நிலவியது. இருந்தபோதிலும் வர்த்தகத்தின் கடைசி நேரத்தில் ஏற்பட்ட எழுச்சியின் காரணமாக இன்றயை வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 5.41 புள்ளிகள் உயர்வடைந்து 62,792.88 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5.20 புள்ளிகள் உயர்ந்து 18,599 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, என்டிபிசி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. டெக் மகேந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி, பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

SCROLL FOR NEXT