வணிகம்

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிவு

செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் காலை 10:42 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 90.90 புள்ளிகள் சரிவடைந்து 62,696.57 ஆக இருந்தது. மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறிய சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 30 புள்ளிகள் சரிவடைந்து 62,756 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து 18,588 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனே தொடங்கின. காலை 10:42 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 90.90 புள்ளிகள் சரிவடைந்து 62,696.57 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.50 புள்ளிகள் சரிந்து 18,575.35 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் நிலவிய எதிர்மறையான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகத்தை சற்று சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை மாருதி சுசூகி, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, கோடாக் மகேந்திரா பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஐடிசி, எம் அண்ட் எம், நெஸ்ட்லே இந்தியா, எல் அண்ட் டி பங்குகள் உயர்வில் இருந்தன. டெக் மகேந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், விப்ரோ, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், டாாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

SCROLL FOR NEXT