வணிகம்

சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்வு

செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் லாபத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 240 புள்ளிகள் (0.38 சதவீதம்) உயர்வடைந்து 62,787 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 59 புள்ளிகள் (0.32 சதவீதம்) உயர்ந்து 18,593 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன தொடங்கின. காலை 9:59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 318.80 புள்ளிகள் உயர்வடைந்து 62,865.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 71.20 புள்ளிகள் உயர்ந்து 18,605.30 ஆக இருந்தது.

உலகளாவிய பங்குச்சந்தைகளின் சாதகமான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றயை வர்த்தகம் முழுவதும் நிலையான லாபத்தை பதிவுசெய்தன. நிதி மற்றும் வாகன பங்குகள் இன்றைய லாபத்திற்கு வழிவகுத்தன. இதன் காரணமாக தொடர்ச்சியான இரண்டாவது நாளாக பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 240.36 புள்ளிகள் உயர்வடைந்து 62,787.47 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 59.75 புள்ளிகள் உயர்ந்து 18,593.85 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டர்ஸ், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்யிட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, டிசிஎஸ், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

SCROLL FOR NEXT