சென்னை: மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"மானுடத்தைக் காக்குமொரு மகத்தான தத்துவமாக காந்தி காற்றோடு கலந்த நாள் இன்று.
உலகெங்கிலும் காந்தியர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள்.
விடுதலைக்காக, நீதிக்காக, சமத்துவத்துக்காக, இயற்கைக்காக போராடிக்கொண்டே இருக்கிறார்கள்.
நாமும் காந்தியைப் பிறரில் தேடாமல், காந்தியாக மாறுவோம்."
இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.