சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம், நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது குடியரசுத் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:
"இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம். நாம்தான் இதன் பாதுகாவலர்கள் என்பதை உணர்வோம். அரசியலமைப்பு நமக்கு வழங்கி இருக்கும் சுதந்திரத்தின், அதிகாரத்தின், உரிமைகளின் உண்மையான மதிப்பை
அறிந்து ஒற்றுமையுடன் கடமையாற்றுவோம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்."
இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.