கோப்புப் படம் 
ஒரு நிமிட வாசிப்பு

திருக்குறளுக்கு அவமரியாதை; நடவடிக்கை எடுக்க வேண்டும்: ம.நீ.ம கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தமிழரைத் தலைநிமிரச் செய்த திருக்குறளுக்கு அவமரியாதை இனிமேல் நடக்காமலிருப்பதற்கான நடவடிக்கை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:

"எதிர்க்குரல் எழுந்தபிறகே டி.என்.பி.எஸ்.சி தேர்வு பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட திருக்குறளானது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழரைத் தலைநிமிரச் செய்த நூல்களுக்கு இதுபோன்ற அவமரியாதை இனிமேல் நடக்காமலிருப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது."

இவ்வாறு மநீம தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT