ஒரு நிமிட வாசிப்பு

உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

செய்திப்பிரிவு

சென்னை : உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம் என முதல்வர் ஸ்டாலின் தனது தேசிய விவசாய தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகத்தவர்க்கு அச்சாணியாக அய்யன் திருவள்ளுவர் குறிப்பிடும் உழவர்கள்தான் இன்று மக்களாட்சியின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

உழவர்களின் நலனை அவர்கள் பயிர்களைக் காப்பதுபோல் எந்நாளும் காப்போம்! உழவர்களுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து அதற்கு உறுதியேற்போம்!" என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT