நிகழ்வுகள்

ராம்ராஜ் காட்டன், ‘இந்து தமிழ் திசை' சார்பில் திருச்சியில் ஆக. 3-ல் ‘அன்பாசிரியர் விருது’ வழங்கும் விழா

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்​நாடு, புதுச்​சேரியைச் சேர்ந்த அரசு பள்​ளி​கள், அரசு உதவி​பெறும் பள்​ளி​கள் மற்​றும் மாநில பாடத் திட்​டத்​தைப் பின்​பற்றி வரும் தனி​யார் பள்​ளி​களில் சிறப்​பாகப் பணி​யாற்​றும் ஆசிரியர்​களைப் பாராட்டி கவுரவிக்​கும் வகை​யில் ராம்​ராஜ் காட்டன் நிறு​வனம், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்​பில் ‘அன்​பாசிரியர் விருது’ விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன்​படி, திருச்சியில் வரும் ஞாயிற்​றுக்​கிழமை காலை 10 மணிக்கு விருது வழங்​கும் விழா நடை​பெறுகிறது.

இந்நிகழ்ச்​சியை டெட்​டால் பநேகா ஸ்வஸ்த் இந்​தியா நிறு​வனம் இணைந்து வழங்​கு​கிறது. லெட்​சுமி செராமிக்​ஸ், பொன்​வண்டுடிடர்​ஜெண்ட் நிறு​வனம், கிரா​மாலயா ஆகியவை நிகழ்ச்​சி​யின் பங்​கு​தா​ரர்​களாக இணைந்​துள்​ளன.

மாணவர்​களுக்கு வழக்​க​மான பாடம் கற்​பிப்​பதுடன் நின்​று​விடா​மல், மாறு​பட்ட சிந்​தனை, புதுமை உணர்​வோடு, அவர்​களின் திறன்​களை வளர்த்​து, சமூக அக்கறை ஊட்​டி, நற்​பண்​பு​களை போதித்​து,பள்​ளியை​யும் மேம்​படுத்​தும் அர்ப்​பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியர்​களைத் தேர்வு செய்து, கடந்த 4 ஆண்​டு​களாக ‘அன்​பாசிரியர் விருது’கள் வழங்​கப்​பட்​டன.

ஐந்​தாம் ஆண்​டாக ‘அன்​பாசிரியர் விருது’ வழங்​கும் நிகழ்வு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரு​கில் உள்ள ஹோட்​டல் தமிழ்​நாடு அரங்​கில், வரும் ஞாயிற்​றுக்​கிழமை (ஆக. 3) காலை 10 மணிக்கு நடை​பெற உள்​ளது. இந்த விருதுக்கு தமிழகம், புதுச்​சேரியைச் சேர்ந்த 549 ஆசிரியர்​கள் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​தனர். அதில் 160 ஆசிரியர்​கள் நேர்​காணலுக்குத் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இவர்​களுக்​கான ஆன்​லைன் வழி நேர்​காணல் தேர்​வுக்குழு​வின​ரால் நடத்​தப்​பட்​டு, 40 ஆசிரியர்​கள் அன்​பாசிரியர் விருதுக்​கும், 4 ஆசிரியர்​கள் ‘முன்​மா​திரி ஆசிரியர் விருதுக்​கும்’ தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். தேர்வு செய்​யப்​பட்ட 44 ஆசிரியர்​களுக்​கும், வரும் ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெறவுள்ள விழா​வில் பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் அன்​பின் மகேஸ் பொய்​யாமொழி விருதுகளை வழங்கி சிறப்​புரை​யாற்​றவுள்​ளார். இவ்​விழா​வில் அழைப்​பிதழ் உள்​ளவர்​கள் மட்​டுமே பங்​கேற்​கலாம்.

SCROLL FOR NEXT