நிகழ்வுகள்

விஐடி சென்னை வழங்கும் ‘உயர்வுக்கு உயர் கல்வி’ பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆன்லைன் தொடர் நிகழ்வு

செய்திப்பிரிவு

சென்னை: பிளஸ் 2 படித்துவிட்டு, அடுத்து என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்த படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும். அத்தகைய மாணவ - மாணவியர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ - ’உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் ஆன்லைன் தொடர் நிகழ்வு நாளையும், நாளை மறுநாளும் (சனி, ஞாயிறு) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை ஈஸ்வரி இன்ஜினியரிங் காலேஜ், சவீதா இன்ஜினியரிங் காலேஜ், ஆல்பா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் ஆகியன இணைந்து வழங்குகின்றன.

வரும் சனிக்கிழமையன்று ஆன்லைன் தொடர் நிகழ்வின் இரண்டாம் பகுதியில் ‘கலை & அறிவியல் துறையிலுள்ள வேலைவாய்ப்புகள்’ எனும் தலைப்பில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழக புள்ளியியல் & பயன்பாட்டுக் கணிதத்துறையைச் சேர்ந்த டாக்டர் சி.விஜயலெட்சுமி, சென்னை சாதிக் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் எம்.ஏ.சாதிக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

வரும் ஞாயிறன்று நடைபெறும் ஆன்லைன் தொடர் நிகழ்வின் மூன்றாம் பகுதியில் ‘மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் & அலைடு இன்ஜினியரிங் ஸ்டிரீம்ஸ் துறையிலுள்ள வாய்ப்புகள்’ எனும் தலைப்பில், திருச்சி என்ஐடி புரடக்‌ஷன் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த டாக்டர், இன்ஜினியர் எம்.துரைசெல்வம், திருவள்ளூர் கேட்டர்பில்லர் இந்தியா பி.லிட்., ஆபரேஷன்ஸ் பொதுமேலாளர் என்.அன்புசெழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். இந்த இரு நிகழ்வைவும் ராணுவ விஞ்ஞானியும் அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

இந்நிகழ்வில் பிளஸ் 2 முடித்த பிறகு படிக்க வேண்டிய பலவகையான படிப்புகள், அதற்கான நுழைவுத்தேர்வுகள், கல்விக்கட்டணம், உதவித்தொகை பெறும் வழிமுறைகள், துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன. நிகழ்வின் நிறைவாக மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வல்லுநர்கள் பதிலளிக்க உள்ளனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணமேதுமில்லை. பங்கேற்க விரும்புபவர்கள், https://www.htamil.org/UUK002 என்ற லிங்கில் அல்லது இத்துடன் உள்ள QR Code மூலமாகப் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். முதலில் பதிவுசெய்யும் 10 மாணவர்களுக்கு டாக்டர் வி.டில்லிபாபு எழுதிய ‘கையருகே கிரீடம்’ எனும் நூல் பரிசாக வழங்கப்படும்.

SCROLL FOR NEXT