தலைநகர் டெல்லி முதல் தளவாய்ப் பட்டணம் வரை, பெண்களுக்கு இருக்கும் மிகப் பெரிய பயம், இரவு வீட்டுக்கு பத்திரமாகப் போய்ச் சேருவோமா என்பதே!
நடக்கும் சம்பவங்களும், வெளிப்படும் செய்திகளும் எல்லோரின் மனதிலும் பயத்தை விதைத்து விட்டன. தவறான நோக்கோடு பார்க்கும், தொடரும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள, செய்ய வேண்டிய வழிமுறைகளை ஃபேஸ்புக் முதல் பக்கத்து வீட்டு பாட்டி வரை அனைவரும் வாரி வாரி வழங்குகின்றனர்.
இங்கே ஓர் இளம்பெண் தனியாக நடந்து வந்துகொண்டிருக்கிறாள். இருள் சூழ்ந்த இரவு. வழியில் புகைப்பிடித்தவாறே ஓர் இளைஞன், அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
பயத்தில் நகர எத்தனிப்பவளின் செல்பேசி அழைக்கிறது. தன் அம்மாவிடம் பேசிக்கொண்டே வீடு செல்லத் தொடங்குகிறாள். நடந்து செல்லச் செல்ல அந்த இளைஞன், இவளைப் பின் தொடர்வதைக் கவனிக்கிறாள். நடையில் வேகம் கூட்ட அவனும் அதற்கு இணையாக வருகிறான்.
ஒரு கட்டத்தில் அப்பெண் ஓடத் தொடங்க அவனும் ஓட்டமாய் வருகிறான். கால் தடுக்கி ஓரிடத்தில் கீழேயும் விழுந்துவிடுகிறாள். இளைஞன் அவளை நெருங்கிவிட, அடுத்து நேர்ந்தது என்ன? நீங்களே இந்த 2 நிமிட வீடியோவைப் பாருங்கள்...
</p><p xmlns="">நச்சென்று நாலே வாக்கியத்தில், ஓர் அவசியமான செய்தியைச் சொல்லியிருக்கிறது இக்குறும்படம்.</p>