பலவண்ண மின்விளக்குகள் பிரகாசிக்கும் பொருட்காட்சியின் பொன் மாலைநேரத்தில் இரு இளைஞர்களின் பிரவேசிக்கிறார்கள். அங்கு இங்கென்று அவர்கள் கண்கள் அலைபாய்கிறது. அவர்கள் தில்லாக செல்ல வேண்டிய இடம் தீம் பார்க்குகள் போன்ற வசதியான பொழுதுபோக்கு இடங்கள்தான் என்றாலும், பொருட்காட்சியைத் தேர்ந்தெடுத்தது மக்கள் கூடும் இடம் என்ற நோக்கத்தில்தான். அதிலும் அழகான இளம்பெண்களைத்தான் அவர்கள் தேடுகிறார்கள். முக்கியமாக வசதியான இளம்பெண்கள்.
அப்படி ஒரு பெண்ணை கண்டு அவளை வட்டமிடுகிறார்கள். தூண்டில் போடமுடியுமா என்று அவள் செல்லும் இடங்களிலெல்லாம் பின் தொடர்கிறார்கள்... ராட்சத ஊஞ்சலில் எதிர் எதிர் இருக்கைகளில் அவர்களின் புன்னகையை அந்த ஊஞ்சல் ஆட்டம் உல்லாச ஆட்டமாகிறது. எதிர்பாராமல் (?) அவள் அறிமுகமாகிவிட அப்புறமென்ன பொருட்காட்சியின் பிரகாசம் முகத்திலும் மிளிர்கிறது...
ஒரு கட்டத்தில் அவளைத் தேடாமலேயே அவன்களிடம் அவள் சிக்குகிறாள்... அந்த மாலை நேர மயக்கத்தில் அடுத்தடுத்து நடந்ததெல்லாம் எதிர்பாராதவைதான்... எந்த வகையில்... என்னதான் நடந்தது..?
ஒரு வர்த்தகப் பொருட்காட்சியின் சாதாரண சூழலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இக்குறும்படம் தந்திருப்பது, இறுதியாண்டு விஸ்காம் மாணவர்களின் இந்த அழகான முயற்சி...
மூன்று நான்கு பாத்திரங்களின் வழியே ஒரு கதையை சொன்னதிலிருந்து, இயல்பான வசனம், பின்னணி இசையிலிருந்து அங்குநிலவிய வண்ண வண்ண வெளிச்சத்தைக் கொண்ட ஒளியமைப்பு, இயக்கம் எல்லாமே சின்னதானதொரு சினிமாவைப் பார்ப்பதுபோன்ற அனுபவம்...
நாளைய சினிமா படைப்பாளிகளின் சின்ன படத்தை நீங்களும் பாருங்களேன்...
</p>