- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
பூரம்:
சுக்கிரனை நட்சத்திரநாதனாகக் கொண்ட பூரம் நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களே!
இந்த ஆண்டு காரியதாமதம் ஏற்படக்கூடும். வீண் பிரச்சினைகள் ஏற்படும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். ஏற்கெனவே பாதியில் நின்ற பணிகள் நடக்கும். விருப்பத்திற்கு மாறாக சில காரியங்கள் நடக்கலாம். தொழில் வியாபாரத்தில் தொய்வு காணப்படும். விட்ட இடத்தைப் பிடிக்க பாடுபட வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாக்குவாதம் செய்து அமைதியை குறைப்பார்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். கவனம் தேவை. பிள்ளைகளிடம் அன்பாக பேசி பழகுவது நல்லது. பெண்கள் பாதியில் நின்ற காரியங்களை விரைவாக செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு செல்வாக்கு உயரும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற நீண்ட நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி வரும்.
பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு கடன்கள் அடையும்.
பரிகாரம்: ஆண்டாள் தாயாரை வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
மதிப்பெண்கள்: 78% நல்லபலன்களை எதிர்பார்க்கலாம்.
**********************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |