இன்றைய ராசிபலன்

இந்தநாள் உங்களுக்கு எப்படி?- 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். மூத்த சகோதரர் உதவுவார்.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: உடல் உஷ்ணத்தால் சில அவதிகள் ஏற்படும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் வரும். நெருங்கிய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள். விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் திரும்ப வருவார்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வேலை தொடர்பான முயற்சியில் தாமதம் ஏற்படும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் உயரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

கும்பம்: சமயோசித புத்தியுடன் செயல்பட்டு பல காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். கணவன் - மனைவிக்குள் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக் கூடும்.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
SCROLL FOR NEXT