இன்றைய ராசிபலன்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

செய்திப்பிரிவு

மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடல்சோர்வு, வயிற்று பிரச்சினைகள் வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.

ரிஷபம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். பணப் புழக்கம் அதிகரிக்கும். பிரபலங்களுடன் நட்பு மலரும். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு திருப்தி தரும். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.

மிதுனம்: முக்கிய பிரமுகரின் உதவியை நாடுவீர்கள். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவு கூடும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

கடகம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அடிக்கடி தொந்தரவு கொடுத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

கன்னி: அலைச்சல், சோர்வு, கோபம் குறையும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பை உணர்ந்து நடப்பார்கள். வாகன பயணத்தில் கவனம் தேவை.

துலாம்: சின்ன சின்ன கவலைகள் வந்துபோகும். நீங்கள் ஒன்று பேச, மற்றவர்கள் வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். எனவே, பேச்சில் அதிக கவனம் அவசியம். ஆன்மிகம், தியானத்தில் ஈடுபாடு ஏற்படும்.

விருச்சிகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு பாராட்டு கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: தடுமாற்றங்கள் நீங்கும். எடுத்த காரியங்களை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும். பூர்வீக சொத்தை மாற்றி அமைப்பீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.

மகரம்: குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். புதிய ஆடை, ஆபரணம் சேரும். விருந்தினர் வருகையால், குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்: பழைய நண்பர்களால் அனுகூலம் உண்டு. குடும்பத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வராக் கடன் என்றிருந்த பழைய பாக்கிகள் வரும்.

மீனம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் திருப்தி தரும்.

SCROLL FOR NEXT