கலை

பிரபல நட்சத்திரமாக மின்னும் பந்துலா ரமா | சென்னை இசை அரங்கம்

கே.சுந்தரராமன்

சங்​கீத வித்​வத் சபை என்று அழைக்​கப்​படும் சென்னை மியூசிக் அகாட​மி, இந்​தி​யக் கலையை ஊக்​கு​விப்​ப​தில் முக்​கிய பங்கு வகிக்​கிறது. இசைக் கச்​சேரி​களுக்​குத் தயா​ராகும் வித​மாக மியூசிக் அகாடமி வளாகத்​தில் இளம் மாணவர்​கள், கலைஞர்​களுக்கு சிறப்பு பயிற்​சிகள் அளிக்​கப்​படு​கின்​றன.

சென்னை மியூசிக் அகாட​மி​யின் 99-வது இசை​விழா​வில் பந்துலா ரமாவின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. கச்​சேரி​யில் அவருக்கு பக்​கபல​மாக அவரது கணவர் எம்​எஸ்​என். மூர்த்தி (வயலின்), வி.​வி.ரமண​மூர்த்தி (மிருதங்​கம்), நெற்​குணம் எஸ்​. சங்​கர் (கஞ்​சி​ரா) இருந்​தனர்.

கலாநிதி ராகத்​தில் அமைந்த தியாக​ராஜர் கீர்த்​தனை​யுடன் (சின்ன நாடென) கச்​சேரியைத் தொடங்​கி​னார் பந்துலா ரமா. அடுத்​த​தாக, ஸ்வாதி திரு​நாள் மகா​ராஜா​வின் ரேவகுப்தி ராகப் பாடல் (கோ​பாலக பாஹி​மாம்), தியாக​ராஜ சுவாமி​யின் கல்​யாண வசந்​தம் ராகக் கீர்த்​தனை (நாதலோலுடை) ஆகிய​வற்றைப் பாடி​னார்.

ஜெயமனோ ஹரி என்ற அரிய ராகத்​தில் அமைந்த தியாக​ராஜ சுவாமி​யின் ‘ஸ்ரீரம்ய சித்த’ கீர்த்​தனையைப் பாடி​னார். இந்த கீர்த்​தனை​யில் ராமனை, அலங்​கார வடி​வினன், இந்​திரன் பகைவனின் உயிர்க்​குடித்​தோனின் சகோ​தரன், அனை​வரை​யும் காப்​பாற்​று​பவன், நிலமகளின் மணாளன் என்று பலவாறு போற்​றுகிறார் தியாக​ராஜர்.

கேதார கௌளை ராகத்​தில் அமைந்த பல்​ல​வியை ராகம் தானம் பல்​லவிக்கு தேர்ந்​தெடுத்​தார் பந்துலா ரமா. ‘நீல மேக ஸ்யாமா வேணு கான லோல’ என்ற பல்​லவி மிஸ்ர சாபு தாளத்​தில் பிரதி பிம்ப பல்​ல​வி​யாக அமைந்​தது. தியாக​ராஜ சுவாமி​யின் சரஸ்​வதி மனோஹரி ராககீர்த்​தனைக்கு (எந்​தவேடு கொந்து ராக​வா) பிறகு, பிர​தானராக​மாக கமகக்​ரியா அமைந்​தது.

விஸ்​தா​ர​மான ஆலாபனைக்​குப் பிறகு, முத்​துசு​வாமி தீட்​சிதரின் ‘மீ​னாட்சி மேமுதம்’ எனத் தொடங்​கும் க்ரு​தி​யைப் பாடி​னார் பந்துலா ரமா. ‘வீணா தச கமகக்​ரி​யா’ என்ற வரி​யில் நிர​வல் செய்​து, ஸ்வரக்​ கோர்​வை​களைப் பாடி​னார். இந்த க்ரு​தி​யில் மீனாட்சி தேவி, மீன் போன்ற கண்​களைக் கொண்​ட​வளாக, ஆனந்​தம் அருள்​பவளாக, மேக நிறத்​தவளாக, ராஜ மாதங்​கி​யாக போற்​றப்​படு​கிறாள்.

ராகம் தானம் பல்​ல​வி​யிலும், பிர​தான ராக ஆலாபனை​யிலும் வயலின் வித்​வான் எம்​எஸ்​என். மூர்த்​தி​யின் பங்கு பாராட்​டுக்​குரியது. தனி ஆவர்த்​தனத்​தில் வி.​வி.ரமண​ மூர்த்​தி​யும், நெற்​குணம் சங்​கரும் தங்​கள் மிருது​வான வாசிப்​பால், கச்​சேரியை மெரு​கேற்​றினர். தஞ்சை சின்​னையா இயற்​றிய பரஸ் ராக ஜாவளி (செலி நேனேட்​லு) மற்​றும் தில்​லா​னா​வுடன் கச்​சேரியை நிறைவு செய்​தார் பந்துலா ரமா.

தனது தந்தை பந்​துலா கோபால ராவிடம் இசை கற்​கத் தொடங்​கிய பந்துலா ரமா, 8 வயது முதல் மேடை​யில் பாடி வரு​கிறார். பின்​னர் வித்​வான் இவதூரி விஜயேஸ்வர ராவிடம் சிறந்த பயிற்சி பெற்​று, தற்போது பிரபல​மான கர்​னாடக இசைக் கலைஞ​ராகத் திகழ்கிறார்.

SCROLL FOR NEXT