தமிழகத்தின் பசுமைப் பரப்பு, வனப்பரப்பை அதிகரிக்க தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த நிலைத்த பசுமை போர்வைத் திட்டத்தை (டிஎன்எம்எஸ்ஜிசிஎஃப்) முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் 16-ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழக வனத்துறையும், வேளாண்மை துறையும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தின்கீழ், கோவையில் வனத்துறை மூலம் மலைவேம்பு, தேக்கு, ஈட்டி, மகாகனி, நாவல், நெல்லி, செம்மரம், சந்தனம், வாகை, புளி, குமிழ், வேங்கை என மொத்தம் 3.43 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, இலவசமாக வழங்க தயார்நிலையில் உள்ளன. இருப்பினும், மரக்கன்றுகள் தேவையான விவசாயிகள் அவற்றை எளிதில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, “மரக்கன்றுகளைப் பெற ‘உழவன்’ செயலியில் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு, வட்டார வேளாண் உதவி அலுவலர்கள் அந்த விவரங்களை சரிபார்த்து, எங்கு மரக்கன்றுகளை நடப்போகிறார்கள் என்பதை கேட்டறிந்து அந்தநிலத்தை ஆய்வுசெய்து, புகைப்படத்துடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கின்றனர். அதைத்தொடர்ந்து வேளாண்மைத்துறை அலுவலரின் பரிந்துரை சீட்டு பெற வேண்டும். அதை கொண்டுசென்று வனத்துறையின் வன விரிவாக்க மைய நாற்றங்காலில் காண்பித்தால் மட்டுமே மரக்கன்றுகள் கிடைக்கும் நிலை உள்ளது. பருவ மழைக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே, நடைமுறையை எளிமைப்படுத்தி, விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் விரைந்து கிடைக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
ஒருவாரத்தில் விநியோகம்
தொடர்பு எண்கள்