தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் வெளியிட்டார். அதனை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சி
நகராட்சிகள்
பேரூராட்சிகள்
மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள் மற்றும் 18 பேரூராட்சிகளில் சேர்த்து மொத்தமுள்ள 387 வார்டுகளில் 3,01,555 ஆண்கள், 3,15,463 பெண்கள், 86 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 6,17,104 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 730 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில்ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ஆறுமுகக்கனி (தேர்தல்), மைக்கேல் (வளர்ச்சி), வட்டார வளர்ச்சி அலுவலர் (தேர்தல்) ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.