சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில் குறைதீர் கூட்டம் வரும் 10-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், சந்தாதாரர்கள், ஓய்வூதியர்கள், நிறுவன உரிமையாளர்கள் ஆகியோர், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தொடர்பாக தங்களுக்கு நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.