Regional01

தலைமை ஆசிரியையிடம் 10 பவுன் நகை பறிப்பு :

செய்திப்பிரிவு

மதுரை புதுவிளாங்குடியைச் சேர்ந்த ஜெயக் குமார் மனைவி அனுராதா(48). இவர் சோழவந்தான் அருகில் உள்ள கருப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலை மை ஆசிரியையாகப் பணிபுரிகிறார்.

இவர் நேற்று முன்தினம் விளாங்குடியில் பேருந்திலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், அனுராதா கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துச் சென்றனர். கூடல்புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT