கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஒமைக்ரான் சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட வார்டு தொடங்கப்பட்டு உள்ளதாக முதல்வர் அசோகன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து கர்நாடகாவை ஒட்டியுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது. அரசின் வழிக்காட்டுதலின்படி வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டு ஒமைக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தடுப்பூசி அறிவுரை
பாதிப்பு குறைவு