Regional01

மதுரையில் மறியல் போராட்டம் - கட்டுமான தொழிலாளர்கள் கைது :

செய்திப்பிரிவு

அனைத்து பகுதி கட்டுமான ஆண், பெண் தொழிலாளர் சங்கத்தினர் மதுரை எல்லீஸ்நகரிலுள்ள தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பு நேற்று காலை திரண்டு மறியல் போராட்டம் செய்தனர்.

60 வயது முடிந்த கட்டுமானத் தொழி லாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். வீடு இல்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்க வேண்டும். 55 வயது பெண் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT