Regional02

தம்பதி விஷம் குடித்து தற்கொலை :

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மேலப்பூவாணம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்சாமி(60), இவரது மனைவி சவரியம்மாள்(50). இவர்களுக்கு சவரிசுரேஷ்(35), ஆரோக்கியசெபஸ்டின்(32) என இரு மகன்கள் உள்ளனர்.

சவரிசுரேஷ் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். அருள்சாமி கரோனாவுக்கு முன்பு பொள்ளாச்சி பகுதியில் சமோசா கடை நடத்தி வந்துள்ளார். கரோனா ஊரடங்கால் ஊர் திரும்பியவர் கிராமத்தில் தங்கி குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை ஆரோக்கிய செபாஸ்டின் வெளியே சென்றிருந்த போது, அருள்சாமி, அவரது மனைவி சவரியம்மாள் இருவரும் ஆபத்தான நிலையில் வீட்டில் மயங்கி கிடந்துள்ளனர். அருகில் வயலுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து பாக்கெட் கிடந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தம்பதி தற்கொலை செய்துகொள்ள காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT