Regional02

கரடிகள் தாக்கியதில் விவசாயி படுகாயம் :

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் பூதிமுட்லு கிராமம் வனத்தை ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் அப்பகுதி மக்கள் ஆடு, மாடுகளை மேய்ப்பது வழக்கம்.

நேற்று வழக்கம் போல் பூதிமுட்லு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனிவாசன் (56) என்பவர் தனது மாடுகளை வனப்பகுதி அடிவாரத்தில் மேய்த்து விட்டு வீட்டிற்குதிரும்பும் போது, 2 குட்டிகளுடன் வந்த கரடி, சீனிவாசனை தாக்கியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து கரடியை விரட்டினர். படுகாயம் அடைந்த சீனிவாசனை, மீட்டு சிகிச்சைக்காக வேப்பனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். மேல் சிகிச்சைகாக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT