TNadu

தமிழகத்தில் புதிதாக 750 பேருக்கு கரோனா :

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேற்று ஆண்கள் 443,பெண்கள் 307 என மொத்தம் 750பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 125, சென்னையில் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 21,021 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 26 லட்சத்து 76,017 பேர் குணமடைந்துள்ளனர். நேற்றுமட்டும் 843 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 8,616 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 13 பேர்உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,388 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,595 பேர் இறந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT