தி.மலை மாவட்ட மக்கள் குறை தீர்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடை பெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி தலைமை வகித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
ஜாதி சான்றிதழ் கேட்டு மனு அளிக்க வந்த கணிக்கர்கள் (குடுகுடுப்பைக் காரர்கள்) சமுதா யத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, "தி.மலை அடுத்த அய்யம் பாளையம் புதூர் பகுதியில் 100 குடும்பங்களும் மற்றும் ஆரணி பள்ளிக் கூட தெருவில் 50 குடும்பங்களும் வசித்து வருகிறோம். எங்களது பிள்ளைகள், சுமார் 300 பேர் பள்ளிகளில் படிக்கின்றனர். அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லாததால், பள்ளி படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஜாதி சான்றிதழ் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.
பின்னர் அவர்கள் மனு அளித்தனர். முன்னதாக, ஆட்சியர் அலுவலகம் முன்பு குடு குடுப்பையை ஆட்டி குறிசொல்வது போல் வந்தனர். அப்போது அங்கிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தில், அவர்கள் வைத்திருந்த பை உள்ளிட்ட உடமைகளை சோதனைக்கு உட்படுத்தினர்.
மலைக்குறவர்கள் கோரிக்கை
பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு
இந்த ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும் பாதையான பாசனக் கால்வாய் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. இதனால் ஏரியின் கரை உடையும் அபாயம் உள்ளது. மேலும், விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் சேதமடையும்.
எனவே, பாசனக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.