Regional01

கல்லூரி மாணவி காய்ச்சலால் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிப்பவர் முகுந்தன். இவரது மகள் ஜீவிதா (19) காஜாமலையிலுள்ள பெரியார் ஈவெரா கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 3 நாட்களாக அவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் அக்.18-ம் தேதி அவரது மூக்கு, வாயிலிருந்து ரத்தம் வடிந்துள்ளது. அதிர்ச்சி யடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக ஜீவிதாவை, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT