தமிழகத்தில் நேற்று ஆண்கள் 463, பெண்கள் 319 என மொத்தம் 782 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதிகபட்சமாக சென்னையில் 116, கோவையில் 115 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 27 லட்சத்து 17,203-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 26 லட்சத்து 71,668 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 907 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். தமிழகம் முழுவதும் 9,211 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 13 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,324-ஆக உயர்ந்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.