‘துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களை போற்றுவதாக’ முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு நேற்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘‘துணிவுடன் அறம் காக்க போராடும் பத்திரிகையாளர்களை போற்றும் நாள் இன்று. உண்மையின் பக்கம் நின்று மக்களின் குரலாய் ஒலிக்கும் ஊடகங்கள், மக்களாட்சியின் நான்காவது தூணாக விளங்குகின்றன. நேர்மையும் நெறியும் தவறாது பணியாற்றும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தேசிய பத்திரிகை தின வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.