Regional01

440 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் :

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அண்ணா நகரில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் வேலாயுதம்பாளையம் போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது கடையில் தடைசெய்யப்பட்ட 440 கிலோ புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் மகாமுனி(40) மீது போலீஸார் நேற்று வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து, ரூ.2 லட்சம் மதிப்புள்ள 440 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT