Regional02

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாணவர்கள் போராட்டம் :

செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கழிப்பறை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.

பள்ளிக்கு அருகில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதைத் தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த உடையார்பாளையம் போலீஸார், ஜெயங்கொண்டம் வருவாய்த் துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்பறைகளுக்குச் சென்றனர்.

SCROLL FOR NEXT