திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் கரையோரம் வசிக் கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு அறி வுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கனமழை யின் காரணமாக கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட பெருமளவு தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது, மேலும் கோரையாறு மற்றும் குடமுருட்டி ஆற்றில் வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
எனவே, பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணை தடுப்ப ணையிலிருந்து நேற்று மாலை 6 மணி முதல் விநாடிக்கு 10,000 கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள் ளது. எனவே, கரையோர கிராமங் களில் உள்ள மக்கள் மற்றும் சலவைத் தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
காவிரியில் அதிக நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் தற்போ தைய நிலையில் ஆற்றில் குளிக் கவோ, நீந்தவோ, மீன்பிடிக்கவோ அல்லது பொழுதுபோக்கவோ பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கரையோரங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்களோ அல்லது மாணவர்களோ ‘செல்பி’ எடுக்கக் கூடாது.
வெள்ள அபாயம் ஏற்பட்டால் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். 93840 56213 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பலாம்.
மேலும் வட்டாட்சியர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள தெரிவிக்கலாம். TN- SMART என்ற செயலியின் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
40 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார்
மேலும், மழைவெள்ள பாதிப் புகளை தடுக்கும் விதமாக 115 இடங்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதே போல, களப்பணியில் ஈடுபடுத்த பணியாளர்களும் தேவையான அளவு உள்ளனர். மரங்கள் கீழே விழுந்தால் உடனடியாக அகற்ற மரம் அறுக்கும் இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்கள், ஜென ரேட்டர் போதிய அளவு உள்ளன. மழை பாதிப்புகளை கண்காணிக்க மண்டல அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.