Regional01

இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு :

செய்திப்பிரிவு

சோழவந்தான் அருகே ரிஷபம் கிராமத்தில் காங்கிரஸ் வடக்கு மாவட்டக்குழு சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முன் னாள் ஊராட்சித் தலைவர் பழனியப்பன் தலைமையில் அக்கட்சியினர் இந்திராகாந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர். முன்னாள் ஊராட்சித் தலைவர் மனோன் மணி, நிர்வாகிகள் ஆறுமுகம், கணேசன், முருகன், பாஸ்கரன், அழகர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT