திருநெல்வேலி டவுன் சாலியர் தெருவில் உள்ள தர்மராஜா கோயிலில் பத்ம ஹஸ்தா கோசாலா அறக்கட்டளை சார்பில் தீபாவளியை முன்னிட்டு ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் பாஞ்சாலா கண்ணன், ராதாகிருஷ்ணன், சந்திசாய், தர்மராஜ், செல்வராஜ், கோபால், கோபி, அழகர் ஆகியோர் மூலம் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டது.